Monday, March 23, 2009

நிலாவும் அம்மாவும் (தொடர்ச்சி)


நிலாவுக்கு ரெண்டு மாசம் ஆகும்போது அவங்க ஆயா தாத்தா வீட்டுக்குப் போயாச்சு. கூடவே சீனியர் அத்தையும் வெகேஷன்க்கு வந்திருந்ததால நிலாக்கு சூப்பரா நேரம் போச்சு. எப்பவும் யாராவது அவங்கள பார்த்துக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. நிலாவுக்கு அவங்க ஆயா மேல எப்பவுமே தனி பாசம் தான். அவ ஸ்பெஷல் ஹாஸ்பிடல்லேர்ந்து வந்து என்னோட நான் இருந்த ஹாஸ்பிடல்ல இருந்த ரெண்டு நாளும் அவங்க ஆயா தான் அவளைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க நெஞ்சிலே சாய்ச்சிக்கிட்டு ஆரோரோ பாட்டு பாடினா நிலா சூப்பரா தூங்கிடுவா. நிலாவுக்கு அவங்க ஆயா குளிப்பாட்டினா மட்டும் பிடிக்காது, குளிப்பாட்டி ட்ரெஸ்ல்லாம் மாட்டி மேக்கப்ல்லாம் போட்ட பிறகு கூட கொஞ்ச நேரம் வரைக்கும் ஆயாவைப் பார்த்து விசும்பிக்கிட்டே இருப்பா (அதைப் பார்க்க செம்ம காமெடியா இருக்கும்). திரும்ப கொஞ்ச நேரத்திலேயே ஆயா கூட செட் ஆகிடுவா. அதனால தான் எங்க நிலாவை "ரொம்ப பாசக்காஆஆஆஆஆஆஆஆஆர பொண்ணு"ன்னு சொல்வேன்.

நிலா அவங்க அப்பா மாதிரியே நிறைய விஷயத்திலே சுகவாசி. அவளுக்கு கை காலெல்லாம் அமுக்கிவிட்டா ரொம்ப பிடிக்கும். முதல் முதல்ல இந்த வேலைய அவங்க ஆயா தான் ஆரம்பிச்சு வெச்சாங்க. கூடவே "ஹப்பா ஹம்மா எவ்ளோ வேலைடா எங்க புள்ளைக்கு"ன்னு சொல்லிக்கிட்டே அமுக்கினா மேடம் முகத்திலே ஒரே புன்னகை தான். அவங்க தாத்தாவோ நிலாவை ஆறு மாசம் ஆகற வரைக்கும் தூக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க (எந்தக் குழந்தைகளையுமே அவங்க சின்ன வயசுல தூக்க மாட்டாங்க), ஆனா நிலாவை தூளில ஆட்டி தூங்க வைக்கிறதுல அவங்க எக்ஸ்பர்ட். நானெல்லாம் அவ சீக்கிரமா தூங்கணும்ன்னு கொஞ்சம் நல்லா வேகமா ஆட்டுவேன், அவங்களோ ரொம்ப பொறுமையா நிதானமா ஆட்டி தூங்க வைப்பாங்க.

நிலாக்கு மூணு மாசம் முடியிற நேரத்திலே என்னோட விசாவும் முடியிற மாதிரி இருந்ததால சவுதிக்கு போக வேண்டிய கட்டாயம். அதனால, ரியாத்க்கு ஜூட் விட்டாச்சு. இங்கே ரியாத் வந்ததும் க்ளைமெட் அவளுக்கு சுத்தமா செட் ஆகல. சளி பிடிச்சு கஷ்டப்பட்டா. இந்தியால நிறைய பேர் சுத்தி இருந்துட்டு திடீர்ன்னு வந்த தனிமை அவளை ரொம்பவே கஷ்டப்படுத்திடுச்சு. குட்டிநிலா ரொம்பவே டல் ஆகிட்டாங்க. வீட்டுல அப்பாவும் அம்மாவும் மட்டும் தான், அப்பாவும் சாயந்திரம் தான் வருவாங்க, அம்மா கூட தான் முழுநேரமும் ஓட்டணும். அவளுக்கு ரொம்பவே போர் அடிச்சிடுச்சு. நைட்ல்லாம் திடீர்ன்னு பயந்துகிட்டு அழுவா. நிலாவுக்கும் அம்மாவுக்கும் இங்கே வழக்கம் போல நைட் ட்யூட்டி ஸ்டார்ட் ஆச்சு. ரெண்டு பேரும் விடிய காலைல உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துக்கிட்டு இருப்போம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு மாசம் ஓட்டியாச்சு. பிறகு, சவுதில குளிர் ரொம்ப அதிகம் ஆனதால இந்தியாவுக்கே திரும்பி வந்துட்டோம்.

நிலா திரும்ப இந்தியா வந்தப்போ யார்கிட்டேயும் போகாம ரொம்ப அடம் பிடிச்சு அழுதா. ஆயா, அத்தை, தாத்தா யாரைப் பார்த்தாலும் அழுகை தான். மூணு நாலு நாள்ல மேடம் பேக் டூ ஃபார்ம்க்கு வந்துட்டாங்க. நிலாவும் பெரிய அத்தையும் சாயந்திரம் ஆனா கச்சேரி ஆரம்பிச்சிடுவாங்க, ஒரே ஆட்டம் தான். அவங்க அத்தை தாளம் போட, நிலா சூப்பரா கைய காலை அசைச்சுகிட்டு டான்ஸ் ஆடுவாங்க. நிலா நாலு மாசம் வரைக்கும் நைட்டெல்லாம் சரியா தூங்காம இருந்தா, அப்போ அவங்க பெரிய அத்தை சும்மா கிண்டலுக்காக "அது எப்டி நிலா நீ பகலெல்லாம் அம்பியா இருக்கே, சாயந்திரம் ரெமோவா மாறி கைய கால ஆட்டிட்டு ஜாலியா விளையாடுற, நைட் மட்டும் ஏன் அந்நியனா மாறிடுறேன்னு (சும்மா கிண்டலுக்குடா நிலாக்குட்டி, கோச்சிக்காதே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) கேட்டாங்க. அதுக்கு அவங்க நடு அத்தை "புள்ளைய போய் ஏன் அப்படில்லாம் சொல்றிங்க"ன்னு சண்டைப் போட ஆரம்பிச்சிட்டாங்க. நிலாக்கு மூணு அத்தைங்க கிடைச்சது ஒரு பெரிய கிஃப்ட்டுன்னு தான் நினைக்கிறேன். நடு அத்தைக்கு பையன் இருக்கிறதால மருமகளை ஸ்பெஷலா கவனிப்பாங்க. "மாமியார்ன்னு ஒரு மரியாதை இல்லாம என்னடி ஓவரா ஆட்டம் போடுறேன்"னு அவளை சும்மா வம்பு வளர்த்துக்கிட்டு சண்டைப் போடுவாங்க. அவளும் சூப்பரா சண்டைப் போடுவா. அவங்க அத்தை சவுண்டு விட்டா இவளும் பதிலுக்கு சவுண்டு விடுவா, வேற யார்கிட்டேயும் சண்டைப் போட மாட்டா. அதையெல்லாம் அப்போ ரெக்கார்ட் பண்ணாம விட்டுட்டேன்னு இப்போ வருத்தமா இருக்கு (அப்போல்லாம் நிலாவுக்காக ஒரு வலைப்பதிவு எழுதப் போறேன்னு தெரியாம போய்டுச்சு :-) ). கடைக்குட்டி அத்தை நிலாவைப் பாட்டுப் பாடியே கரெக்ட் பண்ணிட்டாங்க. நிலாவுக்கு கொஞ்சம் குத்துப்பாட்டெல்லாம் அறிமுகம் செஞ்ச பெருமை அவங்களையே சாரும். "வேர் ஈஸ் த பார்ட்டி", "டாடி மம்மி வீட்டில் இல்லே"ன்னு பாட்டுப் பாடியே நிலாக்கு செரிலாக்கெல்லாம் ஊட்டி விடுவாங்க.

நிலா - நிலாவும் அம்மாவும் மட்டுமில்ல. நிலா, அம்மா, அப்பா, அத்தைகள், மாமாக்கள், மாமி, அத்தாச்சிகள், அத்தான், தாத்தாக்கள், பாட்டி, ஆயான்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. எழுத தான் கை வலிக்குது :-).

கொஞ்சியவர்கள் (4)

சந்தனமுல்லை on March 23, 2009 at 2:35 PM said...

ரொம்ப பாசக்கார பொண்ணாதான் இருக்காங்க நிலா! நல்லா நுட்பமா பதிவு செஞ்சுருக்கீங்க...

சிங்கை நாதன்/SingaiNathan on March 23, 2009 at 5:51 PM said...

//நிலா அவங்க அப்பா மாதிரியே நிறைய விஷயத்திலே சுகவாசி. அவளுக்கு கை காலெல்லாம் அமுக்கிவிட்டா ரொம்ப பிடிக்கும்//

ஹூம் ராசா :)

அன்புடன்
சிங்கை நாதன்

Unknown on March 23, 2009 at 9:10 PM said...

//ஹூம் ராசா :) //

தம்பி நாதா, பொண்ணுக்கு தான் கை காலெல்லாம் அமுக்கி விடுறதா சொல்றாங்க, நீ ஓவரா கற்பனைக்குதிரைய தட்டிவிடாதே...

கோமதி on April 1, 2009 at 6:27 PM said...

//ரொம்ப பாசக்கார பொண்ணாதான் இருக்காங்க நிலா! நல்லா நுட்பமா பதிவு செஞ்சுருக்கீங்க...

//

ஆமா ரொம்ப பாசக்காரப் பொண்ணு தான். நன்றி

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez