Wednesday, May 25, 2011

நிலா சொன்ன "சேட்டை நிலா" கதை


ஒரு ஊர்ல ஒரு சேட்டை நிலா இருந்துச்சாம்

ம்ம்

அது காலைல ஈ தேய்க்க அழுவுமாம்

ம்ம்

அப்றம் குளிக்கிறப்போ சோப்பை கைல கைல எடுத்து இப்டி இப்டி தேய்ச்சுக்குமாம்

ம்ம்

அப்றம் பாலைக் குடிக்க மாட்டேன்னு அழுவுமாம்

ம்ம்ம்

ஆயா தாத்தாவை அடிக்குமாம்

என்னது அடிக்குமா?

இல்லப்பா சும்மா கொஞ்சும்

ம்ம்

லயா பாப்பா மேல ஏறி உக்காருமாம்

பேட் கேர்ள்

கதைய கேளு

ம்ம் சரி சொல்லு

எண்ணெய எடுத்துத் தலைல ஊத்திக்குமாம்

ம்ம்

லோஷனை எடுத்து கைல ஊத்தி கீழல்லாம் கொட்டுமாம்

ம்ம்

பவுடரை எடுத்து மூஞ்சுல உடம்புல கீழல்லாம் கொட்டிப் பூசுமாம்

ம்ம்

சாப்பாட்டை வாய்ல வச்சிக்கிட்டு அழுமாம்

ம்ம்

தண்ணியே குடிக்காதாம்

ம்ம்

ஜூஸ் கொடுத்தா அழுமாம்

ம்ம்

நைட்டு தூங்கப் போறப்போ கை சொப்புமாம்

ம்ம்

அவ்ளோ தான் கதை முடிஞ்சிடுச்சு, இன்னும் ஏன் ம்ம் போடுற

கொஞ்சியவர்கள் (8)

அகமது சுபைர் on May 25, 2011 11:56 AM said...

நிலா....

ச்சோஓஓஓ ச்வீட் :)))))

சாம்ராஜ்ய ப்ரியன் on May 25, 2011 12:39 PM said...

:-))))))))))))))

ரோகிணிசிவா on May 25, 2011 3:10 PM said...

வெயிட் , பெஸ்ட் இஸ் எட் டு கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) on May 26, 2011 7:54 AM said...

நிலா ஒரு அறிவாளி பாஸ்.

தகடூர் கோபி(Gopi) on May 26, 2011 1:12 PM said...

:-)))

D.R.Ashok on May 28, 2011 10:54 AM said...

ம்ம்ம்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! on May 28, 2011 3:29 PM said...

ஆஹா நிலாவை வைத்து இப்படியும் கதைக் கேட்கலாமா !? நல்ல இருக்கு சகா . தொடருங்கள்

saro on September 23, 2011 9:30 AM said...

nila sonna kathaiyai lateaa ketten. ammam nila eppa varum

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez